இயற்பியல் விதிகளின்படி, இரண்டு புள்ளிகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே மின்சாரம் பாயும். ஒரு பறவை ஒரே கம்பியில் இரண்டு கால்களையும் வைத்து அமரும்போது, அதன் கால்களுக்கு இடையே எந்த மின்னழுத்த வேறுபாடும் ஏற்படுவதில்லை. இதனால், மின்சாரம் பறவையின் உடல் வழியாகப் பாயாமல், கம்பி வழியாகவே நேராகச் சென்றுவிடுகிறது.
பறவைகளூக்கு ஏன் பாதிப்பு ஏற்படுவதில்லை?
பறவைகளுக்கு ஷாக் அடிக்காததற்கு இன்னொரு காரணம், மின் சுற்று முழுமையடையாமல் இருப்பதுதான். மின்சாரம் பாய, அது அதிக வோல்டேஜில் இருந்து பூஜ்ஜிய வோல்டேஜ் உள்ள பகுதியை நோக்கி ஒரு முழுமையான சுற்றை உருவாக்க வேண்டும். பறவை கம்பியில் மட்டுமே அமர்ந்திருப்பதால், தரை அல்லது வேறு எந்தப் பொருளுடனும் அதற்குத் தொடர்பு இருப்பதில்லை.
இதனால் மின் சுற்று முழுமையடையாததால், பறவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதுவே மனிதர்கள் தரையில் நின்றுகொண்டு கம்பியைத் தொட்டால், நம் உடல் ஒரு கடத்தியாக மாறி, மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து மின் சுற்று முழுமையடைவதால் ஷாக் அடிக்கிறது.
இதையும் படிங்க: Boiled Eggs: ஃப்ரிட்ஜில் வச்ச அவிச்ச முட்டை.. எத்தனை நாள் வரை சேஃப்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு!