ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் தங்களுடைய இளைய மகனின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினர்.. ஜாம்நகரில் நடந்த முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் ரிஹானா, ஏகான் மற்றும் தில்ஜித் டோசாஞ்ச் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
மார்ச் மாதம் தொடங்கிய ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற கோடீஸ்வரர்கள் உட்பட பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜூன் மாதத்தில், இத்தாலியில் இருந்து பிரான்சுக்கு ஒரு ஆடம்பரமான பயணத்துடன் 2வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடந்தது. இந்த நிகழ்விலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள், மற்றும் சர்வதேச நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட சம்பளம் என இந்த திருமண விழாக்களுக்கு சுமார் ரூ. 5,000 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த எண்ணிக்கை, இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் திருமணத்திற்கு செலவான ரூ. 1,361 கோடியை விட அதிகம் என்பதால் இது உலகின் மிகவும் விலை உயர்ந்த திருமணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஜாம்நகர் நிகழ்வில் பங்கேற்ற ரிஹானாவுக்கு ரூ. 74 கோடியும், சங்கீத் இரவில் தோன்றியதற்காக ஜஸ்டின் பீபருக்கு ரூ. 83 கோடியும் குறிப்பிடத்தக்க செலவினங்களில் அடங்கும். ஆடம்பரமான பிரைவேட் ஜெட் விமானங்கள் மற்றும் விரிவான பாதுகாப்புக்கான செலவுகளை ஈடுகட்ட, திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்காக மட்டும் ரூ.2,500 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.