யார் தானம் செய்யக்கூடாது?
குணப்படுத்தவியலாத கொடும் நோயான எய்ட்ஸ் உள்ளவர்கள், சிபிலிஸ், ரத்தத் கொற்று உள்ளவர்கள், மஞ்சள் காமாலை பாதிப்புள்ளவர்கள், ரண ஜன்னி, காலரா, விஷக் காய்ச்சல் பாதிப்பு, மூளைக் காய்ச்சல், ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரழந்தவர்களின் கண்களைத் தானமாக பெறமாட்டார்கள். அதனை தானம் செய்வதும் கூடாது.
இறந்த பிறகு கண்களை தானம் செய்யலாமா?
ஒருவர் உயிரிழந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும். உயிரிழந்தவரின் கண்களை அருகே அமைந்துள்ள கண் வங்கிக்கு தானமாக கொடுக்கலாம். அருகேயுள்ள வங்கியில் சொல்வதால் சரியான நேரத்தில் கார்னியா மாற்று அறுவை சிகிச்சையை விரைவில் செய்ய வாய்ப்பு ஏற்படும். ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்குப் பின் கண்கள் மோசமான நிலையை அடையத் தொடங்கும்.