
நம் வீட்டில் எந்தப் பொருளை வாங்கினாலும் அவற்றை ஸ்டோர் பண்றதுக்கு பிளாஸ்டிக் டப்பாக்கள் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். கிச்சன் முதல் பிரிட்ஜ் வரை என எல்லாத்துக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் தான் குவிந்திருக்கும். மலிவானது, அழகானது, லேசானது என பல காரணங்களுக்காக இதை அதிகமாக வாங்கி பயன்படுத்துறோம். ஆனா, எல்லா பொருட்களையும் பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பது நல்லது. சில பொருட்கள் பிளாஸ்டிக் டப்பாவில் ஒருபோதும் வைக்கவே கூடாது. ஏனெனில், அது ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.
சூடான சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் எதையும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கக்கூடாது. சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கும் போது பிளாஸ்டிக் சூடாகி அதில் இருக்கும் பிஸ்பினால் ஏ (BPA) மற்றும் தாலேட்ஸ் (Phthalates) என்ற கெமிக்கல்ஸ் உணவில் கலந்து, அது நம் உடம்புக்குள்ள போய் ஹார்மோன் பிரச்சனைகள், இனப்பெருக்க மண்டல பாதிப்புகள் என பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. வேண்டுமானால் நன்கு ஆற வைத்து பிறகு கூட வைக்கலாம்.
எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ் போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் சேமிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை பிளாஸ்டிக் உடன் வினைபுரிந்து தீங்கை விளைவிக்கும்.
அதிக கொழுப்புள்ள உணவுகள் :
எண்ணெயில் பொரித்த உணவுகள், வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்தால் அவை பிளாஸ்டிக் உடன் வினைபுரிய வாய்ப்புள்ளது.
சில வீடுகளில் மண்ணெண்ணெய், பெட்ரோல், பெயிண்ட், தின்னர் போன்ற ரசாயனப் பொருட்கள் மிச்சமிருந்தால், அதை பிளாஸ்டிக் கேன் அல்லது பாட்டிலில் சேமித்து வைப்பார்கள். ஆனால் அது ரொம்பவே ஆபத்து. ஏனெனில் இந்த ரசாயனங்கள் பிளாஸ்டிக்கை அரித்து கசிவை ஏற்படுத்தும். இதனால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பூச்சிக்கொல்லிகள் மருந்துகள்:
பிளாஸ்டிக் டப்பாக்களில் பூச்சிக்கொல்லிகள் போன்ற சில வகையான ரசாயன மருந்துகளை வைக்கக் கூடாது. ஏனெனில் இவை பிளாஸ்டிக்கோடு வினைபுரிந்து டப்பாவை பலவீனப்படுத்திவிடும். இதனால் நச்சு வாயுக்கள் உருவாகும். ஒருவேளை அவற்றை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்து வைத்தால் அதை குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் எட்டாத வகையில் உயரத்தில் வையுங்கள்.
பிளாஸ்டிக் டப்பாக்களில் கத்தி, ஸ்க்ரூ, சுத்தி மாதிரியான கூர்மையான மற்றும் கனமான உலோகப் பொருட்களை ஒருபோதும் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், டப்பாவில் கீறல் விழும் அல்லது ஓட்டையாகலாம். அதுமட்டுமின்றி, இந்த உலோகங்கள் பிளாஸ்டிக்கோடு உராய்ந்து, மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடும். இது ஆபத்து. எனவே, இந்த மாதிரி பொருட்களை பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பதற்கு பதிலாக ஸ்டீல், டூல் பாக்ஸ் அல்லது மர டப்பாக்களில் வைக்கலாம்.
ஆல்கஹால் :
பிளாஸ்டிக் டப்பாக்களில் ஆல்கஹால் சேமிப்பது நல்லதல்ல. ஏனெனில் அவை பிளாஸ்டிக் உடன் வினைபுரிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.