நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த விலைவாசி உயர்வு காரணமாக நாம் வாழ்வது மிகவும் கடினம் என்று சொல்லலாம். இத்தகைய சூழ்நிலையில், நாம் எவ்வளவுதான் சேமித்து வைத்தாலும், போதாது.
அந்த வகையில், மழை காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்துவது சிலிண்டர். காரணம், இந்த பருவத்தில் உணவை சூடாக நாம் சாப்பிட விரும்புகிறோம். இப்படி சாப்பிடுவது கூட ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம். ஆனால், இப்படி தொடர்ந்து செய்வதினால் கேஸ் விரைவில் தீர்ந்து போய்விடும்.
கேஸ் சிலிண்டர் விலையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதை எவ்வளவுதான் சிக்கனமாக பயன்படுத்தி வந்தாலும் சீக்கிரமே கேஸ் தீர்ந்து, இல்லத்தரசிகளுக்கு தலைவலியை கொடுக்கும். ஆனால், மழைக்காலத்தில் சமைக்கும்போது கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து போகாமல் இருக்க, அதை இரண்டு மாதம் வரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.