பகலில் ஏன் காய வைக்க வேண்டும்?
சூரிய ஒளி:
ஆடைகளில் ஒட்டியிருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அளிக்க சூரிய ஒளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைகளின் ஆடைகளை சூரிய ஒளியில் காய வைத்தால் சூரிய ஒளியின் கதிர்வீச்சுகள் துணியில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது.
துர்நாற்றம் நீங்கும்:
குழந்தைகளின் ஆடையில் சூரிய ஒளி படும்போது ஆடையில் ஈரப்பதத்தால் உருவாகும் துர்நாற்றம் நீங்கும். சொல்லப்போனால் சூரிய ஒளியில் காயவைத்த ஆடையில் துர்நாற்றம் இருக்காது சுத்தமாக இருக்கும். மேலும் விரைவாகவும் காய்ந்து விடும்.