பன்னீர் சேமிக்க
பன்னீரை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். இது பன்னீர் புளிப்பு அல்லது கசப்பாக மாறுவதைத் தடுக்கும், மேலும் மென்மையாகவும் இருக்கும்.
ஊறுகாய் கெட்டுப்போகாமல் தடுக்க
மழைக்காலத்தில் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே, அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து, அவற்றின் மேலே எப்போதும் எண்ணெய் அடுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஊறுகாய் கெட்டுப் போவதைத் தடுக்கும்.
எறும்பு தொல்லையிலிருந்து சர்க்கரையைத் தடுக்க
சர்க்கரை வைத்திருக்கும் ஜாடியில் 2-3 கிராம்புகளை வைக்கவும். கிராம்புகளின் வாசனையினால் எறும்புகள் கிட்ட வரவே வராது.
அரிசியை வேக வைக்க:
ரேஷன் கடையில் வாங்கிய அரிசி, பருப்பு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். விக்கிற விலை வாசியில் கேஸ் அடுப்பின் சிலிண்டர் சீக்கிரம் காலியாகும். எனவே, இனிமேல் அரிசி, பருப்பு சீக்கிரமாக வேக அதில் சிறிய துண்டு கொட்டாங்குச்சி ஓட்டை நாரை எடுத்து கழுவி போட்டு வேக வைக்கவேண்டும்.