இந்திய வரலாற்றில் மறக்க முடியாத 4 அரசியல் படுகொலைகள்!!

First Published Sep 2, 2024, 11:57 AM IST

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தீனதயாள் உபாத்யாய் ஆகியோரின் படுகொலைகள் குறித்து இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

மகாத்மா காந்தி (1948)

தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலை நாட்டையே உலுக்கியது. ஜனவரி 30, 1948 இல், நாதுராம் கோட்சே அவரை சுட்டுக் கொன்றார். அந்த சமயத்தில், காந்தி இந்தியாவில் பரவியிருந்த வகுப்புவாத வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை எதிர்த்த கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றார்.

இந்திரா காந்தி (1984)

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 இல் படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் காவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோர் அவரை சுட்டுக் கொன்றனர். ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையால் சீக்கிய சமூகம் கோபமடைந்திருந்தது. பொற்கோயிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் புனித கோயிலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது மற்றும் சீக்கிய சமூகம் மிகவும் கோபமடைந்தது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

Latest Videos


ராஜீவ் காந்தி (1991)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் suicide bomber மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி மே 21, 1991 அன்று தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு மாலை அணிவிக்கும் போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த தாணு தன்னைத் தானே வெடிக்கச் செய்தார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பியதால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்று ராஜீவ் காந்தி மீது கோபத்தில் இருந்தது.  

தீனதயாள் உபாத்யாய் (1968)

பாரதிய ஜனசங்கத்தின் முக்கிய தலைவரான தீனதயாள் உபாத்யாய் மர்மமான முறையில் இறந்தார். பிப்ரவரி 11, 1968 இல், உத்தரப் பிரதேசத்தில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் தீனதயாள் உபாத்யாயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

click me!