இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று 'உலக இதய தினம்' கொண்டாடப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் துடித்துக் நம்முடைய இதயத்தை, நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.
இதய நோய் பாதிப்பு காரணமாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல்வேறு மரணங்கள் ஏற்படுகிறது.. இதற்கு முக்கிய காரணமாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்கை முறை மாற்றம் உள்ளது. ஒருவருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டால், முதலில் உங்கள் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு வருகிறது. நமது இதயத்திற்கு சிறிதளவு கூட நல்லதல்லாத அந்த உணவுகள் எவை என்று தெரிந்து கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
பீட்ஸாவில் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. எனவே, இது போன்ற உணவுகளை தவிருங்கள்.
46
Today is World Heart Day
சிவப்பு இறைச்சியில் நிறைய கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மது அருந்தாமல் இருங்கள். மேற் சொன்ன உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. பின்னர் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
56
Today is World Heart Day
பஜ்ஜி, போண்டா போன்றவற்றில் நிறைய சோடியம், டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
66
Today is World Heart Day
இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள செய்ய வேண்டியவை:
மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் பருமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள். தினசரி 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.