koottan soru : திருநெல்வேலி ஸ்பெஷல் கூடாஞ்சோறு: பாரம்பரிய சுவையில் அசத்தல் ரெசிபி!

Published : Aug 18, 2026, 10:00 PM IST

மண் வாசனை மாறாத நெல்லை சீமையின் ஆரோக்கிய பொக்கிஷம் கூடாஞ்சோறு! கிராமத்து பாரம்பரிய சுவையில், அதிக சத்துக்கள் நிறைந்த இந்த கூட்டாஞ்சோறு டயட்டில் இருப்பவர்களுக்கும் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த தேர்வு.

PREV
17
நெல்லை கூட்டாஞ்சோறு :

திருநெல்வேலி மண் மணக்கும் பாரம்பரிய உணவுகளில் கூடாஞ்சோற்றுக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான இடம் உண்டு. பழங்காலத்தில் கிராமங்களில் உறவினர்களும் நண்பர்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் கொண்டு வரும் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் கீரைகளை ஒரே பானையில் இட்டு சமைத்து மகிழ்ந்த உணவே இந்த ‘கூடாஞ்சோறு’. சிறுதானியங்கள், நாட்டுக்காய்கறிகள் மற்றும் பசுமையான கீரைகளின் சத்தான கலவையில் தயாராகும் இந்த உணவு, நாவிற்கு சுவையையும் உடலுக்கு அளப்பரிய ஆற்றலையும் தரக்கூடிய அற்புத படைப்பாகும்.

27
தேவையான பொருட்கள்:

ஒரு கப் பச்சரிசி அல்லது சாமை அரிசி,

அரை கப் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கத்திரிக்காய், முருங்கைக்காய், அரசாணிக்காய் (பூசணி), சேப்பங்கிழங்கு போன்ற நாட்டுக்காய்கறிகள் ஒன்றரை கப்,

பொடியாக நறுக்கிய சிறு கீரை அல்லது அரைக்கீரை ஒரு கப்,

நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தலா பத்து

மசாலாவிற்கு ஒரு தேக்கரண்டி சின்ன சீரகம்,

ஒரு தேக்கரண்டி மிளகு,

அரை கப் தேங்காய் துருவல்

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்

தாளிப்பதற்கு சுத்தமான நெல்லை நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள்

37
செய்முறை விளக்கம்:

முதலில் அரிசி மற்றும் பருப்புக் கலவையை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஊறிய அரிசி-பருப்புடன் நறுக்கிய நாட்டுக்காய்கறிகள், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிட வேண்டும்.

47
மசாலா அரைக்கும் பதம் :

காய்கறிகள் வெந்து கொண்டிருக்கும் போதே, சீரகம், மிளகு, தேங்காய் துருவல் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் தெளித்து, லேசான கொரகொரப்பான பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

57
கீரை சேர்க்கும் முறை :

சாதமும் காய்கறிகளும் முக்கால் பதம் வெந்த நிலையை அடைந்தவுடன், நறுக்கி வைத்துள்ள பசுமையான கீரை மற்றும் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

67
தாளிப்பு முறை:

இறுதியாக, ஒரு சிறு கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் தாளித்து சாதத்தில் கொட்ட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு 'தம்'மில் வைத்திருந்து இறக்கினால், மூக்கைத் துளைக்கும் மணத்துடன் சுவையான நெல்லை கூடாஞ்சோறு தயார்.

77
சுவையை கூட்டும் சிறப்பு குறிப்புகள்:

கூடாஞ்சோற்றின் உண்மையான மணமும் சுவையும் அதில் சேர்க்கப்படும் சுத்தமான நெல்லை நல்லெண்ணெயிலும், புதிதாக நுணுக்கிய மிளகு-சீரகத்தின் அளவிலும் தான் அடங்கியுள்ளது. காய்கறிகள் மிகவும் குழைந்து விடாமல், சாதத்தோடு ஒன்றிணைந்து வரும் பதத்தில் இறக்குவது இதன் சுவையை மேலும் அதிகரிக்கும். மதிய உணவிற்கு சுடச்சுட இந்த கூடாஞ்சோற்றுடன் சுட்ட அப்பளம் அல்லது மொறுமொறுப்பான வத்தல் வைத்துப் பரிமாறினால், அதன் சுவை நெல்லைச் சீமையின் பாரம்பரியத்தை வீடெங்கும் மணக்கச் செய்யும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories