தமிழர்கள் வருடம்தோறும் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடுவர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வேறு பெயர்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி, இந்திரனை வணங்கும் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் குடும்பத்தினர் இணைந்து அறுவடைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திரனை வணங்கி காணிக்கை இடுவர். இரண்டாவது நாளில் தான் சூரிய பொங்கல் கொண்டாடப்படும். செழுமையான அறுவடையை பெற வேண்டி சூரிய பகவானுக்கு பிரசாதம் அளிப்பார்கள்.