Sukran peyarchi 2022 Palangal: சுக்கிரனின் இன்று காலை அஸ்தம நிலையால், குறிப்பிட்ட ராசிகளுக்கு, சுபமாகவும் சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
சுக்கிரன் கிரகத்தின் அமைப்பானது அனைத்து ராசிக்காரர்களின் செல்வம், மகிழ்ச்சி, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்டோபர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படியாக, சுக்கிரன் கிரகம் அக்டோபர் 1ஆம் தேதி காலை 5:05 மணிக்கு அஸ்தமித்தது. இவர், வரும் நவம்பர் 20 வரை சுக்கிரன் அஸ்தம நிலையில் இருக்கும். இந்த சுக்கிரனின் அஸ்தம நிலையால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. மேஷம் ராசியில் பிறந்தவர்கள், எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமணம் நடைபெறும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம்.
34
sukran peyarchi 2022
ரிஷபம்:
மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க தாமதம் ஆகலாம். காதல் வாழ்க்கையில் அலட்சியம் இருக்கும்.உத்தியோகஸ்தர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.சொத்து, சுப செலவுகள் குறையும். பயணத்தின் போது கவனமாக இருங்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வில் சிறப்பாக இருப்பார்கள். கடன் கொடுக்க வேண்டாம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய விருந்தினர் வரலாம். வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ளுங்கள். சதித்திட்டங்கள் தீட்டப்படலாம். கவனமாக இருங்கள்.அரசுத் துறையில் லாபம் உண்டு. வீட்டில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.