மழைக்காலங்களில், பொதுவாக எலிகள் கதகதப்பான இடம் தேடி அலைந்து நம்முடைய வீடுகளில் தஞ்சம் புகும். இதனை பார்த்து விட்டு சாதாரணமாக எடுத்துக் கொண்டால், சில நாட்கள் சென்றதும் வீடு முழுவதும் குட்டிகள் போட்டு உங்கள் வீட்டிலேயே முழுவதும் குடியேறி விடும். அதன் பிறகு, அவைகளை விரட்டி அடிப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கும்.
அதுமட்டுமின்று, எலியின் எச்சில், முடி எல்லாமே ஆபத்தை விளைவிக்க கூடியது தான். ஆம், எலியின் வாய் பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் மனிதருக்கு காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, வீட்டை எப்போதும் எலி தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடத்தில், இன்னும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு நீங்கள் எப்போதும் வீட்டை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் வீட்டில் மூலை முடுக்கெல்லாம் எலி புகுந்து விட்டால், இந்த பொருட்களை பயன்படுத்தி அதனை எப்படி விரட்டி அடிப்பது என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
முதலில் அதற்கு நீங்கள் ஒரு வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வட்டமாக நறுக்கி உங்கள் வீடுகளில் எலி வரும் வழிகளில் எல்லாம் இதை வைத்து விடுங்கள் இந்த வாடைக்கு எலி வரவே வராது.