அதுமட்டுமின்று, எலியின் எச்சில், முடி எல்லாமே ஆபத்தை விளைவிக்க கூடியது தான். ஆம், எலியின் வாய் பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் மனிதருக்கு காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, வீட்டை எப்போதும் எலி தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடத்தில், இன்னும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு நீங்கள் எப்போதும் வீட்டை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.