Death Prediction: ஒருவர் மரணம் அடைய போவதை முன்கூட்டியே உணர்த்தும் 10 அறிகுறிகள்..உஷாரா இருங்கள் மக்களே..!

First Published Sep 23, 2022, 12:47 PM IST

Death Prediction: ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகள் சில, அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதரின் வாழ்க்கையில், பிறப்பு என்ற ஒன்று எப்படி உள்ளதோ, அதே போன்று இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். எவ்வளவோ விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒருவரின் இறப்பு மட்டும் இதுவரை கணிக்க முடியவில்லை. மரணம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உலகில் பிறந்த உயிர்களுக்கு மரணிக்கும் நாள் தெரிந்தால், வாழும் ஒவ்வொரு நாளுமே நரகமாகத் தான் இருக்கும். அப்படியான உங்களின் அகால மரணத்தை முன்கூட்டியே கணிக்கும்  அறிகுறிகள் சில சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பார்வதி தேவி, சிவனிடம் ஒருவர் இறக்கப்போகிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார் அதற்கு சிவன் அளித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

1. எப்போது ஒருவனது பிம்பத்தின் எதிரொலியை, தண்ணீரிலோ, காண்ணாடியிலோ தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால், அவன் இன்னும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறான் என்று அர்த்தமாம்.

2. எப்போது ஒருவனது சருமத்தின் நிறமானது, வெளிர் நிறமாகவோ, மஞ்சளாகவோ, சிவப்பாகவோ மாற ஆரம்பித்தால் அவன் இன்னும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறான் என்று அர்த்தமாம்.

3. ஒருவருக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக எப்போது தெரிகிறதோ, அவன் இறக்கப்போகிறான் என்று அர்த்தமாம்.

4. ஒருவரில் இடது கை மட்டும் நீண்ட நாட்கள் துடிக்கவோ, நடுங்கவோ ஆரம்பித்தால் அவர் இன்னும் சில நாட்களில் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும். 

5. ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ, அல்லது கிரகம் அழிவது போன்று கனவுகள் வந்தால், அவர் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும். 

6. ஒருவரால், வானத்தில்  உள்ள நட்சத்திரங்களை காணமுடியவில்லையோ, அவர் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

7. அதே போன்று, சூரியன், நிலா போன்றவை வானத்தில் சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அவர் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
 

அறிவியலின் படி சில குறிப்புகள்:

1. ஒருவர் மரணத்தை நெருங்க நெருங்க அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. மேலும், இயற்கையான ஆற்றல் வழங்கல் உடலுக்கு இல்லாமல், சோர்வு மற்றும் களைப்பை அதிகம் உணரக்கூடும்.
 
2. ஒருவருக்கு மரணம் நெருங்க நெருங்க, சில நாட்களுக்கு முன்பிருந்தே உணவு அல்லது நீர் பருகுவதைக் கூட முற்றிலும் நிறுத்தக்கூடும்.
 

3. ஒருவர் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தால், அவர்களது தசைகள் மிகவும் பலவீனமாகும். அதன் பிறகு சிறு வேளைகளை கூட அவர்களால் செய்ய முடியாது. 

4. மரணத்தின் நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் கை, கால்களில்  இரத்தத்தின் அளவு அல்லது இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும்.

click me!