காற்றை சுத்திகரிக்கும் இந்த செடிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா?

Published : Mar 22, 2023, 07:53 PM IST

நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க நமது வீட்டைச் சுற்றி சில செடிகளை வளர்த்து வருவதன் மூலம் காற்றை சுத்திகரிக்கலாம். அவை என்னென்ன செடிகள் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து .கொள்ளலாம்.

PREV
15
காற்றை சுத்திகரிக்கும் இந்த செடிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா?
you can come to street from the money plant

நாம் நீண்ட நாட்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழ சுத்தமான காற்றும், சுத்தமான தண்ணீரும் சம அளவில் முக்கிய பங்கு அளிக்கின்றன. நாம் பருகும் தண்ணீரை சுத்திகரிக்க நம் வீடுகளில் RO எனப்படும் இயந்திரத்தின் துணையுடன் சுத்திகரிப்பு செய்து தண்ணீரை அருந்துவோம்.

அதே போன்று நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க நமது வீட்டைச் சுற்றி சில செடிகளை வளர்த்து வருவதன் மூலம் காற்றை சுத்திகரிக்கலாம். அவை என்னென்ன செடிகள் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து .கொள்ளலாம்.

25

மணிபிளான்ட்:

கொடி வகையை சார்ந்த இந்த செடியை நம்மில் அநேகமானோர் செல்வத்தை தரும் என்று கருதி வீட்டில் வளர்த்து வருவதை பார்த்து இருப்போம். செல்வம் சேருகிறதோ, இல்லையோ நாம் சுவாசிக்கும் காற்றை நன்றாக சுத்திகரிக்க செய்கிறது. மணி பிளான்ட் செடியை சூரிய வெளிச்சம் கிடைக்காத இடத்திலும் வளர்க்கலாம் என்பதால் இதனை வீட்டிற்குள்ளும் வளர்க்கலாம். 

Summer Tips : கொளுத்தும் வெயிலிலும் வீடு ஜில்லுன்னு இருக்கனுமா?ஏசி எல்லாம் வேண்டாங்க!ஈஸியா இத பண்ணுங்க போதும்!.

35

கற்றாழை:

நமது தோல் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை மிகச் சிறந்த தீர்வை தரும் என்பதனை நாம் அறிவோம். அதனை அதனை தவிர காற்றை சுத்திகரிக்கும் செயலையும் மிகச் சிறந்த வகையில் செய்கிறது. இதனை வீட்டில் வளர்ப்பதால் காற்றின் தரம் உயரும், மேலும் சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றை எப்போதும் புத்துணர்ச்சியாக மாற்றும் தன்மை கொண்டது.

45

எலுமிச்சைப் புல் :

இந்த எலுமிச்சைப் புல் செடியில் சிட்ரல் எனப்படும் வேதிப் பொருள் இருப்பதால் காற்றில் நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாக இருக்கிறது. தவிர இந்த செடி கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. தவிர இது ஒரு இயற்கை கொசு விரட்டியாகவும் இருக்கிறது

55

புதினா:

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் புதினா மருத்துவத்திலும் ஒரு சிறந்த பங்கை தருகிறது. மேலும் இது விரைவாக வளரக் கூடிய தாவரம் கூட . இதனை வீட்டில் வளர்ப்பதால் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி கிடைக்கும். தவிர ஈ, எலிகள் மற்றும் எறும்புகள்போன்றவைகளின் தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கும்.

நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்திகரித்து, புத்துணர்ச்சியை தரும் இந்த செடிகளை நீங்களும் உங்களது வீடுகளில் வளர்த்து பயன் அடையுங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories