குழந்தை வளர்ப்பு ஒருபோதும் சாதாரணமான விஷயம் கிடையாது. குழந்தைகளின் கல்வி, உடல் நலம், மனநலம் ஆகியவற்றின் மீது பெற்றோருக்கு அதிக பொறுப்புள்ளது. இது அவர்களின் கடமையாகும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிவிட்டன. அவர்களுடைய திரைநேரம், பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய அவசியமுள்ளது. இந்தப் பதிவில் சிறந்த பெற்றோராக இருக்க விரும்பும் ஒவ்வொரு தம்பதியினரும் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.