கற்பனை திறன் வளர்கிறது.
குழந்தைகள் தனியாக விளையாடுவதால் அவர்களின் கற்பனை திறன் மேம்படுகிறது. பெற்றோர் நிர்ணயித்த வரம்புகளை நீக்குகிறது. புதிய உலகங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான தீர்வுகளை கற்பனை செய்ய குழந்தைகளுக்கு உதவுகிறது குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளுடன் உங்கள் வீட்டில் ஒரு வசதியான மூலையை உருவாக்கவும். என்ன விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளே தேர்வு செய்யட்டும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் :
குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பதன் மூலம் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல் தங்களை மகிழ்விக்க குழந்தைகள் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தனியாக விளையாடுவதற்கு நேரத்தை திட்டமிடுங்கள். அவர்கள் விளையாடும் போது அவர்களை தொந்தரவு செய்வதையோ அல்லது அவர்கள் அருகிலேயே இருப்பதையோ தவிர்ப்பது நல்லது.