துளசி இலைகள்
துளசி இலைகள் நம்முடைய சருமத்தில் உண்டாகும் எரியும் உணர்வைக் குறைக்க பயன்படும். இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் ஆகியவற்றை குறைக்கும். இதற்கு 1 கப் துளசி இலைகளை 1 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வையுங்கள். இதில் பஞ்சை நனைத்து சொறி இருக்கும் இடத்தில் போட்டால் அரிப்பு உடனே போய்விடும்.