உடன்பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உடன்பிறப்புகள் தினம் கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை சேர்ந்த கிளவுடா எவர்ட் தான். அமெரிக்காவின் மான்ஹட்டனை சேர்ந்தவரான கிளவுடா எவார்ட் என்பவர் தனது உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்துவிட்டார்.
24
அவர்கள் மீது அதீத பாசம் வைத்திருந்த கிளவுடா, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாளை நிறுவினார். இதற்காக கடந்த 1995-ம் ஆண்டு உடன்பிறப்புகள் தின அறக்கட்டளையை கிளவுடா தொண்டு நிறுவனமாக நிறுவியதோடு மட்டுமல்லாமல் இந்த நாளை அங்கீகரிக்க அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
அவரின் இந்த முயற்சியின் பலனாக அமெரிக்காவின் 49 மாகாண ஆளுநர்கள், அதிபர்கள் புஷ், ஒபாமா, கிளிண்டன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் இதனை ஆமோதித்தனர். இதன்பின்னரே உடன் பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கிளவுடாவின் ஆசையாக இருந்தது. அது ஆரம்பத்தில் நடக்காவிட்டாலும், தற்போது இந்த உடன்பிறப்புகள் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
44
பிறப்பு முதல் இறப்பு வரை உடனிருக்கும் ஒரே உறவு உடன்பிறப்புகள் தான். அத்தகைய உறவை கொண்டாடும் தினமான இன்று உடன்பிறப்புகளை சந்தித்து அவர்களுடன் தங்களது பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தும், அவர்களை உணவகத்திற்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தும் கொண்டாடலாம். ஏராளமானோர் உடன் பிறப்புகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.