உங்களுடைய பித்தப்பையில் தொற்று வந்தால், சிறுநீரின் நிறம் மாறும். அப்போது பழுப்பு நிறமாக சிறுநீர் மாறும். சிறுநீர்ப்பையில் ஏதேனும் காயம் அல்லது அடைப்பு ஏற்பட்டாலும் அந்த நிறம் இருக்கும். இப்படி ஏற்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். சூடோமோனாஸ் ஏருகினோசா பாக்டீரியாவின் தொற்று ஏற்பட்டால் சிறுநீர் நீலம், பச்சை அல்லது ஊதா ஆகிய நிறத்தில் தோன்றும். நுரையுடன் சிறுநீர் வந்தால் அதில் புரதம் இருப்பதைக் குறிக்கிறது. உடலில் புரதம் அதிகமாக இருந்தாலோ, நீர் அதிகமாக இருந்தாலோ நுரை வரும். தொடர்ச்சியா வந்தால் மருத்துவரிடம் காட்ட வேண்டும்.