Dreams Values:
இரவு 1 மணி அளவில் நீங்கள் காணும் கனவு ஒரு வருடம் கழித்து பலிக்கும். இரவு 2 மணிக்கு கனவு வந்தால் இன்னும் 6 மாதத்தில் பலிக்கும். அதுவே, நீங்கள் அதிகாலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தின் படி தெரியவந்துள்ளது. அந்த வகையில், நமது கனவில் வரும் விஷயங்களுக்கு என்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவுகளில் நாம் இதுவரை கண்டிராத முகங்களை காண்பதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே கனவில் நம் உறவினர்கள், நண்பர்கள், நம்முடன் பழகியவர்கள், நம்முடைய மனதில் பதிந்து போனமுகம், நமக்குத் தெரிந்தவர்கள், மனதுக்கு நெருக்கமானவர்கள், பிடித்தவர்கள், பிரபலங்கள், இதுவரை பார்த்தவர்கள் முகம் கனவில் வரும்.
Dreams Values:
அதற்கான பலன் என்ன?
நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள். தான் இறந்துவிட்டதுபோல்கனவு வந்தால், பதற்றம் வேண்டாம். ஏனெனில், அது நன்மைகளையே குறிப்பிடும். உங்களுக்கு சுக வாழ்க்கை உண்டாகும்.
உங்களுக்கு நெருக்கமானவர், உறவினர், நண்பர்கள் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய பிரச்சனைகள் அவரை விட்டு நீங்கும். வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.
Dreams Values:
தெய்வம் கனவு பலன்கள்:
நமது கனவில் இறைவன் தெய்வம் கனவில் வந்தால், உங்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும்.வாழ்வில் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். புது ஒளி பிறக்கும். மகிழ்ச்சி பொங்கும்.
நீங்கள் அறிந்திராத உங்களின் முன் ஜென்ம நிகழ்வுகள் :
ஒரு சில தடவை நீங்கள் இதுவரை அறிந்திராத நிகழ்வுகள் உங்களுடைய கனவில் தோன்றி இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான கனவுகள் அடிக்கடி உங்களுக்கு தோன்றினால் அந்த குறிப்பிட்ட சம்பவம் உங்கள் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.
மேலும் படிக்க..Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்
கன்று ஈன்ற பசு கனவில் வந்தால் பலன்:
பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும்.இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாடு, அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தான தர்மங்களைச் செய்யலாம்.