வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி கூடம் செல்பவர்கள், அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைவருமே மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடக்க பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
சில நிமிட நடைபயிற்சி நம்முடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்தும். வாயுக்கோளாறு, குடல் பிரச்சினைகள், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்றவை விரைவில் குணமாகும். சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் நடப்பது செரிமான அமைப்பை மேம்பாடு அடைய செய்கிறது.