- இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தலையணை பயன்படுத்தினால் மூச்சுத்திணறல் ஏற்படும் சில சமயங்களில் இறப்பு கூட நிகழும்.
- தலையணையில் இருக்கும் பஞ்சு மற்றும் பீட்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
- பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல உடல் நல கோளாறுகள் ஏற்படும். அதிக சூட்டின் காரணமாக அதிகமாக வியக்க தொடங்கும் இது குழந்தைகளுக்கு நல்லதல்ல.
- சில பெற்றோர்கள் சாப்டான தலையணையை குழந்தைக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் குழந்தை நீண்ட நேரம் தூங்கும் போது உயரமான தலையணையால் குழந்தையின் கழுத்து எலும்பு மோசமாக பாதிக்கப்படும். எனவே இதற்கு தலையணை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
குறிப்பு : குழந்தையை தலையணை இல்லாமல் தூங்க வைக்கவும். மேலும் அவ்வப்போது குழந்தையின் தூக்க நிலையில் மாற்றவும்.