இன்றைய மாறி வரும் நவீன கால சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நோக்கி கடந்து செல்வதற்கு நட்பே உறுதுணையாக இருக்கிறது. இந்த நட்பைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 சர்வதேச நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக வைத்து கொள்ள நண்பர்கள் அவசியம். எனவே, நீங்கள் இந்த நாளில் பிரிந்து போன நண்பர்களை தேடி, நட்பு கொள்ளுங்கள். புதிய நபர்களைச் சந்தித்து நல்லுறவை பேணுங்கள்.