Shukra Peyarchi 2022 Palangal: செப்டம்பர் 17ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமிக்கும். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்கை சிறப்பாக இருக்கும்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் பார்வை ஒருவருக்கு இருந்தால், அவர்கள் செல்வம், புகழ், பணம் போன்றவற்றில் சிறந்த விளங்க முடியும்..சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அனைத்து ராசிக்காரர்களின் குண நலன்கள், ஆளுமை தன்மை, எதிர்காலம் என பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
26
Shukra Peyarchi 2022 Palangal:
அந்த வகையில் இந்த நேரத்தில், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வாழ்க்கையை ஆடம்பரமாக அனுபவித்து, தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வார்கள். அவர்களுக்கு அன்னை மகாலட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும்..அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்..
ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். தொழிலில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் பணியில் மிகவும் ஈடுபாட்டுடனும் நேர்மையுடன் செயல்படுகிறார்கள். ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால் எப்போதும் சிறந்த விஷயங்களையே விரும்புவார்.
46
Shukra Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த ஆளுமை பண்பு கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்து அதன் முழு பலனையும் பெறுவார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அவருடைய ஆசை நிச்சயமாக நிறைவேறும். அவர்கள் எப்போதும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கவும், ஆடம்பர வாழ்க்கைக்கு அதிகம் செலவிடவும் விரும்புகிறார்கள். வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் அனுபவிப்பதில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
56
Shukra Peyarchi 2022 Palangal:
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் புத்திசாலிகள். சீரான எண்ணம் கொண்டவர்கள். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அது அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் நிறைய பணம் சம்பாதித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு வசதியையும் அனுபவிக்கிறார்கள்.
விருச்சிகம், ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இளமையிலேயே வெற்றி கிடைக்கும். அவர்கள் விரைவில் நிறைய பணம் சம்பாதிது, ஆடம்பர வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள். தைரியமானவர்கள், எனவே அவர்கள் ரிஸ்க் எடுக்கவும் சவால்களை சந்திக்கவும் பயப்பட மாட்டார்கள்.