வெறும் 20 ரூபாய் போதும்..! இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால்.. பிரச்சனை தீர்ந்து.. பின் நிகழும் அதிசயம்!

First Published Sep 14, 2022, 5:07 PM IST

பணம் நிறைவாக பெற்று,  வீட்டில் கும்பத்தினரோடு நிம்மதியாக வாழும் வரம் கிடைத்தால் உண்மையில் அவனே மிகவும் பாக்கியவான். அப்படி பட்ட பாக்கியவானாக உங்களை மற்றும் வல்லமை கொண்டது தான் எறும்புக்கு நீங்கள் கொடுக்கும் தானம். 
 

சரி எறும்புக்கு என்ன பொருளை தானமாக கொடுக்கலாம், அதை எப்படி கொடுக்க வேண்டும் இதனால் என்ன பலன் என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பசித்த வயிற்றுக்கு உணவு தானம் கொடுப்பது என்பது, நமக்கு புண்ணியத்தை தேடிக்கொடுக்கும் மிக உயரிய செயல் ஆகும். ஆனால் தினமும் ஒரு 10 முதல் 50 பேருக்கு சாப்பாடு வழங்க வசதி படைத்தவர்களால் முடியுமே தவிர, மாத சம்பளத்தில் குடும்பத்தை நடத்துபவர்களாலும், அன்றாடம் கூலிக்கு வேலை செய்பவர்களாலும் முடியாத செயல்.

மேலும் செய்திகள்: 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக சிம்பு செய்த செயல்..! கண் கலங்கிய டி.ராஜேந்தர் ..!
 

இப்படி பட்டவர்கள் இந்த ஒரு பொருளை எறும்புக்கு தனமாக கொடுத்தால், அந்த எறும்புகள் 100க்கணக்கில் கூட சாப்பிட்டு விட்டு உங்களை மனதார வாழ்த்தும். இதற்காக நீங்கள் மாதம் 20 முதல் 50 ரூபாய் செலவு செய்தாலே போதும்.

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் வெல்லம் தான் உங்கள் கஷ்டத்தை போக்க வல்ல வல்லமை கொண்ட பொருள். இதனை நீங்கள் வாங்கி வைத்து கொண்டு தினமும் எறும்புகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்: Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
 

தானம் கொடுக்கும் முறை: தினமும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியே, வலது புறத்தில் மண் இருந்தால் துடைத்து விட்டு, சிறிதளவு வெல்லத்துண்டை வையுங்கள். எறும்புகள் அவற்றை உண்டு, உங்களை வாழ்த்தும். 
 

ஓவ்வொரு நாளும் எப்படி, எறும்புகள்... மெல்ல மெல்ல நீங்கள் கொடுக்கும் வெள்ளத்தை தின்னுகிறதோ அதே போல் உங்களது கஷ்டங்கள், மற்றும் பிரச்சனைகள் எல்லாம் மெல்ல மெல்ல தீர்ந்து சந்தோசம் நிலைக்க துவங்கும். இறைவன் படிப்பில் எறும்பும் ஒரு படைப்பு தான்... எனவே அன்னத்தை மனிதர்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. எறும்புகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் செய்திகள்: ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?
 

lotus kolam

மார்கழி மாதத்தில் கூட, முனிவர்களும், சித்தர்களும் எறும்பு ரூபங்களில் வீட்டிற்கு வருகை தருவார்கள் என்பது ஐதீகம், இதன் காரணமாகவே பலர் இன்றும் மார்கழி மாதங்களில் பச்சை அரிசி மாவால் வீட்டு வாசலில் கோலமிடுவார்கள். இதே பச்சை அரிசி மாவால் பூஜை அறையிலும் கோலமிடுவது மிகவும் நல்லது. 

அதே போல் நீங்கள் வெல்லம் வைக்கும் இடத்தில் எறும்புகள் அதிகம் இருந்தால், துடைப்பத்தை வைத்து உடனே பெருக்கி விடாமல், சில துளி தண்ணீரை அவற்றின் மேல் தெளித்தால்... அந்த எறும்புகள் 2 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பிவிடும் பின்னர் நீங்கள் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

click me!