சரி எறும்புக்கு என்ன பொருளை தானமாக கொடுக்கலாம், அதை எப்படி கொடுக்க வேண்டும் இதனால் என்ன பலன் என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
இப்படி பட்டவர்கள் இந்த ஒரு பொருளை எறும்புக்கு தனமாக கொடுத்தால், அந்த எறும்புகள் 100க்கணக்கில் கூட சாப்பிட்டு விட்டு உங்களை மனதார வாழ்த்தும். இதற்காக நீங்கள் மாதம் 20 முதல் 50 ரூபாய் செலவு செய்தாலே போதும்.
தானம் கொடுக்கும் முறை: தினமும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியே, வலது புறத்தில் மண் இருந்தால் துடைத்து விட்டு, சிறிதளவு வெல்லத்துண்டை வையுங்கள். எறும்புகள் அவற்றை உண்டு, உங்களை வாழ்த்தும்.
lotus kolam
மார்கழி மாதத்தில் கூட, முனிவர்களும், சித்தர்களும் எறும்பு ரூபங்களில் வீட்டிற்கு வருகை தருவார்கள் என்பது ஐதீகம், இதன் காரணமாகவே பலர் இன்றும் மார்கழி மாதங்களில் பச்சை அரிசி மாவால் வீட்டு வாசலில் கோலமிடுவார்கள். இதே பச்சை அரிசி மாவால் பூஜை அறையிலும் கோலமிடுவது மிகவும் நல்லது.
அதே போல் நீங்கள் வெல்லம் வைக்கும் இடத்தில் எறும்புகள் அதிகம் இருந்தால், துடைப்பத்தை வைத்து உடனே பெருக்கி விடாமல், சில துளி தண்ணீரை அவற்றின் மேல் தெளித்தால்... அந்த எறும்புகள் 2 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பிவிடும் பின்னர் நீங்கள் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.