இட்லி மாவு ரொம்ப நாள் புளிக்காமல் இருக்க வேண்டுமென்றால் மாவு அரைக்கும்போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இட்லியோ தோசையோ அதற்கு மாவு அரைக்கும்போது முதலில் மொத்தமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து ப்ரிட்ஜில் பாதுகாக்க வேண்டும். மொத்தமாக உப்பு போடக் கூடாது. தேவைப்படும் மாவை கலக்கும்போது மட்டும் தான் உப்பு போடவேண்டும்.
அடிக்குற வெயிலில் மொத்தமாக உப்பு போட்டால் மாவு சீக்கிரம் புளித்து போகும். இது தான் எங்களுக்கே தெரியும் என்கிறீர்களா? அதுமட்டுமில்லை, ப்ரிட்ஜில் வைக்கும் மாவில் வெற்றிலையை காம்பு நீக்காமல் போட்டு வையுங்கள். அப்படி செய்தால் மாவு சீக்கிரம் புளிக்காது. குறிப்பாக வெற்றிலையின் காம்பு மாவினுள் அழுத்தி இருக்க வேண்டும்.