1886ஆம் ஆண்டு இறந்தவர்களுடன் பேசு வகையில் ஓயிஜோ போர்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. அதாவது ப்ளான்செட் (Planchette) எனும் அந்த சாதனம் மேல் நம் விரல்களை வைத்து கேள்வி கேட்டால், அந்த பலகை மீதுள்ள எழுத்துக்கள் நகர்ந்து பதில் வரும். இந்த போர்டை தான் ஆவிகளுடன் பேசும் “ஓயிஜா போர்டு" என்கிறார்கள். அதாவது இந்த போர்டு மூலம் நமக்கு ஆவிகள் பதில் சொல்லும் என்பது தான் கான்செப்ட். இந்த போர்டை வைத்து விளையாடியதாக கூறப்படும் கொலம்பியா மாணவிகள் கிட்டத்தட்ட 30 பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.