இந்த உத்தி சிறப்பாகச் செயல்பட, டிரையரில் இரண்டிலிருந்து மூன்று ஆடைகளை மட்டுமே போடவும்; எடுத்துக்காட்டாக, இரண்டு சட்டைகள் அல்லது ஒரு சட்டை மற்றும் ஒரு கால்சட்டை என வைக்கலாம். அதிகப்படியான துணிகளை உள்ளே திணித்தால் நீராவி சமமாகப் பரவாது, இதனால் சுருக்கங்கள் நீங்காது. துணிகளின் அளவுக்குத் தகுந்தாற்போல ஐந்து முதல் ஆறு ஐஸ் கட்டிகளைச் சேர்க்க வேண்டும். டிரையர் நின்றவுடன் தாமதிக்காமல் உடனடியாகத் துணிகளை வெளியே எடுத்து ஹேங்கரில் மாட்டிவிட வேண்டும்; இல்லையெனில் மீண்டும் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.
இதையும் படிங்க : Post Office Scheme : 5 லட்சம் போட்டா 10 லட்சம்! போஸ்ட் ஆபீஸ் தரும் சூப்பர் திட்டம்!
இந்த முறையின் நன்மைகள்
அவசரமாக வெளியில் செல்லும்போது இஸ்திரி செய்ய நேரமில்லாத தருடிகளில் இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஸ்திரி பெட்டி தேவைப்படாததால் நமது உழைப்பும் நேரமும் மிச்சமாகும். குறிப்பாக, பருத்திச் சட்டைகள் மற்றும் ரவிக்கைகளில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதற்கு இந்த முறை அருமையாக வேலை செய்யும்.
கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
ஆனாலும், தடிமனான ஜீன்ஸ் கால்சட்டைகள் மற்றும் கோட்டுகள் போன்ற ஆடைகளுக்கு இந்த வித்தையானது பெரிதாகப் கைக்கொடுக்காது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிகப்படியான ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால் துணி நனைந்துவிடும், இதன் காரணமாகச் சுருக்கங்கள் போகாது.
இதையும் படிங்க : Mosquito : இந்தச் செடிகளை வீட்டுக்குள்ள வச்சுப் பாருங்க! கொசு தலைதெறிக்க ஓடும்!