துளசியில் மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல நோய்களை இவை குணமாக்கும். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூட இதை ஒப்புக் கொண்டுள்ளனர். தினமும் 10 துளசி இலைகளை ஒருவர் தினமும் தின்பதால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அண்டாது. மார்பு, தொண்டை வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
25
தினமும் துளசி இலை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது உடலுக்கான கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையை ஒரு செம்பு பாத்திரத்தில் கைபிடி அளவு போட்டு ஊறவைத்து அதை பருகினால் நீரழிவு வியாதி கூட கட்டுக்குள் இருக்குமாம். வெறும் வயிற்றில் இதை 48 நாட்கள் செய்தால் பல நோயும் அண்டாது.
35
உடலில் வியர்வையால் வீசும் துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் முந்தைய நாள் துளசி இலைகளை போட்டு விடுங்கள். அந்த நீரில் நீராடினால் வாசனையாக இருப்பீர்கள். துளசிச் சாறு அருந்தினால் சளித் தொல்லை, ஆஸ்துமா போன்றவை குணமாகும். துளசி சாறு ஜீரண சக்தியை கூட்டும். இதயம் போன்ற உள்உறுப்புகள் சீராக இயங்க துளசி உதவுகிறது.
சருமத்தில் உள்ள படை, சொரி போன்ற நோய்களை கூட துளசி குணம் பெற செய்யும். துளசி இலையுடன், எலுமிச்சை சாறு விட்டு மையாக அரைத்து அதனை சருமத்தில் தடவி வந்தால் படை சொரி விலகும். சிறுநீர் தொடர்பான பிரச்சனை உடையவர்கள் துளசி விதையை அரைத்து உண்ண வேண்டும். அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீரும் அருந்தி வர பிரச்சனை சரியாகும்.
55
துளசி இலை சாறில் தேன், இஞ்சி போன்றவை கலந்து ஒரு தேக்கரண்டி குடிக்கலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் மூன்று வேளை மூன்று கரண்டி இந்த துளசி கஷாயம் புகட்டினால் போதும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.