காலில் பூஞ்சை தொற்று வந்ததற்கான அறிகுறிகள்:
அரிப்பு, சிவந்து போதல், வீக்கம், செதில்கள், கொப்புளங்கள், கால் விரல்களுக்கு இடையே வெடிப்புகள், காலில் துர்நாற்றம் அடிப்பது ஆகியவை மழை காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வந்ததற்கான அறிகுறிகள் ஆகும்.
காலில் பூஞ்சை தொற்றை தடுப்பது எப்படி?
மழை காலத்தில் காலில் பூஞ்சை தொற்றைத் தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அவை..
1. மழைக்காலத்தில் வீட்டில் இருந்தாலோ அல்லது வெளியில் போயிட்டு வந்தாலோ தினமும் காலில் சோப்பு போட்டு சூடான தண்ணீர் வைத்து கால்களை கழுவி நன்கு உலர்த்தவும். அதுவும் குறிப்பாக கால்களுக்கு இடையே நன்றாக கழுவுங்கள்.
2. மழை காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வராமல் இருக்க காலுறைகள் மற்றும் காலணிகளை அடிக்கடி மாற்றுங்கள். குறிப்பாக சுத்தமான பருத்தி காலுறைகளை மட்டுமே அணியுங்கள். ஈரமான காலணிகளை ஒருபோதும் அணிய வேண்டாம்.