poondu urippathu eppadi
முதலில் அதற்கு நீங்கள் ஒரு கிலோ முழு பூண்டை எடுத்து, ஒரு துணியில் வைத்து சுருட்டி, ஒரு கட்டையை வைத்து அடித்தால் கூட சுலபமாக அது நமக்கு பிரிந்து கிடைத்து விடும். பூண்டின் அளவு குறைவாக இருந்தால், கைகளை கொண்டும் பிரித்து கொள்ளலாம். பிறகு எல்லா பூண்டையும் ஒரு முறத்தில் கொட்டி புடைத்தால், மேலே இருக்கும் லேசான தோலை நீக்கிவிட்டு பூண்டு பற்களை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்களாம்.
poondu urippathu eppadi
அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து சூடு செய்து அதில் தனித்தனியாக இருக்கும் பூண்டை கொட்டி 60 செகண்ட்ஸ் சூடு செய்யுங்கள். ஒரு கரண்டியை வைத்து இரண்டு முறை கலந்துவிடலாம். குறிப்பாக, பூண்டுக்கு உள்ளே சூடு ஏறி இருக்கக் கூடாது. பூண்டின் தோல் மட்டும் தான் சூடாகி இருக்க வேண்டும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
poondu urippathu eppadi
பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு ஒரு பெரிய காட்டன் துணி எடுத்துக்கோங்க. அதில் அவித்த இந்த பூண்டை கொட்டி நன்றாக முடிச்சை போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது இந்த முடிச்சை துணி துவைப்பது போல தரையில் நன்றாக அடிக்க வேண்டும். 10 முறை அடித்தால் கூட தவறு கிடையாது.
பிறகு அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே பூண்டை பாருங்கள். பூண்டில் இருக்கும் தோல்கள் எல்லாம் தனித்தனியாக பிரிந்து வந்திருக்கும்.