நாம் உண்ணும் உணவை பக்குவமாக உமிழ் நீர் சேர்த்து அரைத்து வயிற்றுக்கு அனுப்பும் முக்கிய வேலையை செய்கிறது வாய். வாயில் புண் ஏற்பட்டால் இந்த வேலையை முழுமையாக செய்ய முடியாது. பல தொந்தரவுகளை உருவாக்கும். அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட்டால்போதும் என்கிற மனப்பாங்கு தான் அனைவருக்கும் இருக்கும். ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்பட்டு விட்டால், நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும். இவை சரியாக ஒரு சில வாரங்கள் கூட எடுத்துக் கொள்ளும். அப்படியான சூழலில் நீங்கள் வீட்டு மருத்துவம் மூலம் வாய்ப்புண் குணமாக்க சில முயற்சி எடுக்கலாம்.
மேலும் படிக்க....Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்
மணத்தக்காளி கீரை
வாய்ப்புண் ஏற்பட்டவர்கள் தினமும் மணத்தக்காளி சாறை புண் மீது படும்படி வாயில் சிறிது நேரம் வைத்தால், ஒரு சில நாட்களில் குணமாகிவிடும். பொதுவாக குடல் புண்கள் இருந்தால் மணத்தக்காளி சாப்பிடுவது நாட்டு வைத்தியத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
பசு நெய்:
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.