High Cholesterol: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்..இனிமேல், அலட்சியம் வேண்டாம்

First Published Sep 7, 2022, 12:05 PM IST

High Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருப்பதை ஆரம்ப கால சில கண் அறிகுறிகளின் மூலம் நாம் அறிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம்.  

cholesterol

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​இதயத்திற்கு அருகில் உள்ள தமனிகளில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இது இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்த தொடங்குகிறது. மேலும் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது கண்கள், தோல் அல்லது முகம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகிறது. 


 மேலும் படிக்க ....Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

High Cholesterol

அத்துடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர, நாம் தினசரி உடற்பயிற்சியும் செய்ய வேண்டும், இல்லையெனில் கலோரிகள் எரிக்கப்படாது உடலின் நரம்புகளில் கெட்ட கொழுப்பு சேரத் தொடங்கும்.  இதனால் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்ளும் பட்சத்தில் நமது ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். 

High Cholesterol

1. கண்களில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை கண்டறிய முடியும்.  

2. கண்களின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள், கண் இமைகளின் தோற்றம், பார்வையில் உள்ள கருமையான கோடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்று.  

3. ஆரம்பகாலத்தில் பார்வையில் சிறிதளவு குறைபாடு ஏற்பட்டு மங்கலான பார்வை, கார்னியாவைச் சுற்றி சாம்பல் அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் படிவுகள், கண்களைச் சுற்றி மஞ்சள் புடைப்புகள் ஆகியவை ஏற்படுவது உடலில் அதிக கொழுப்புகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.  

 மேலும் படிக்க ....Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்
 

cholesterol

4. அதிக கொலஸ்டராலால் சாந்தெலஸ்மா ஏற்படுகிறது, இது கண்களைச் சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் உருவாகும் ஒரு உயர்ந்த அல்லது தட்டையான மஞ்சள் நிற பகுதி.  சருமத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் இது உருவாகிறது, ஆனால் இது பார்வையை பாதிக்காது.  

இதனை தவிர கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி..?

1. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு லிப்பிட் ப்ரொஃபைல் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.

2. இதயத்தின் தமனிகள் எவ்வளவு தடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆஞ்சியோகிராபி காட்டுகிறது.

3. மூளையில் அடைப்பு ஏற்பட்டால், மூளை நரம்புகளில் ஆஞ்சியோகிராபி செய்யப்படும்.

click me!