பொதுவாகவே நம்மில் பலர் சரும அழகை பராமரிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்துவதால், பாதங்களில் கவனம் செலுத்துவதில் மறந்து விடுகிறோம். இதனால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் நமக்கு பாத ஆரோக்கியமும் மிகவும் அவசியம்.
இன்றைய காலத்தில் பியூட்டி பார்லர்களில் முக அழகு மட்டுமின்றி, பாதங்களையும் அழகுப்படுத்துவதற்கேன பெடிக்யூர்
என்னும் ட்ரீட்மென்ட் செய்யப்படுகிறது. இந்த ட்ரீட்மென்ட் எப்பேர்ப்பட்ட மோசமான பாதங்களையும் சுத்தப்படுத்தி அழகாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி, பாதங்களில் உள்ள நரம்புகளை தூண்டி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள்.
உங்களுக்கு தெரியுமா.. நம்முடைய உடலில் இருக்கும் முக்கியமான நரம்புகள் பாதங்களோடு இணைந்திருக்கிறது. எனவே, நாம் பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆகும்.
ஆனால், நீங்கள் உங்களது பாதத்தை ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அழகுப்படுத்தலாம் தெரியுமா? எனவே, உங்களது பாதங்களை பராமரிக்க நீங்கள் என்ன செய்ய என்பதை இங்கு பார்க்கலாம்.