Gooseberry: கல்லீரல் பிரச்சனை சரியாக வேண்டுமா..? நெல்லிக்காயை இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள்..

First Published Aug 20, 2022, 12:59 PM IST

Gooseberry: உடலின் நச்சுக்களைவெளியேற்றி இரத்தத்தை சுத்திகரிக்க உதவும், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். 

Gooseberry

கல்லீரல் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதனை ஒருவர் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம். இல்லையென்றால் சிறுநீரக கற்கள் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உணவு செரிமானம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், நச்சுக்களை வெளியேற்றுதல் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

Gooseberry

அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுநீரகத்தை நச்சு நீக்குவதும் மிக அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சில பானங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எனவே, உங்கள் சிறுநீரகத்தை எப்படி நச்சு நீக்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

Gooseberry

நெல்லிக்காய்:

கல்லீரலைப் பொறுத்த வரையில், நெல்லிக்காய் வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நன்மை பயக்கும்.  நெல்லியில் வைட்டமின் C , ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமான பாதிப்பு,  நீரிழிவு, அஜீரணம், கண் பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பலவீனத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.

Gooseberry

நெல்லிக்காய் ஜூஸ்:

தேவையான பொருட்கள்: 

நெல்லிக்காய் - 3 
 
இஞ்சி - நறுக்கியது 1 துண்டு 

புதினா இலைகள் - இரண்டு மூன்று 

தேன், எலுமிச்சை சாறு - டீ டீஸ்புன் 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

Gooseberry

செய்முறை: 

1. நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, கூடவே இஞ்சி, சிறிதளவு தண்ணீர்  ஊற்றி அரைக்க வேண்டும். 

2. இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம். இல்லையென்றால், அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும்.

3. நெல்லிக்காய் பவுடர் தற்போது சந்தைகளில் கிடைக்கிறது. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து தண்ணீருடன் புதினா, கறிவேப்பிலை சேர்த்து உட்கொள்ளவும்.
 

click me!