தாமதமாக சாப்பிடுவது கல்லீரலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் சீக்கிரம் சாப்பிட்டால், உடலில் நச்சு நீக்கும் செயல்முறை சீராக வெளியேறும். இது கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது :
சில ஆய்வுகளில், சீக்கிரம் சாப்பிடுவது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது :
தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவது தூக்கத்தை பாதிக்கும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுவே இரவு உணவே சீக்கிரமாக சாப்பிட்டால் செரிமானத்தை நிறைவு செய்து உடலை ஓய்வு நிலைக்கு தயார் படுத்தும். இதனால் இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.