சங்குப்பூவை சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் ஆகிய பெயர்களிலும் அழைக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள காடுகள், வேலிகளில் சங்குப்பூ இருக்கும். இதனுடைய இலை, வேர், பூக்கள், விதை யாவும் மருத்துவத்தில் பயன்படுத்தக் கூடியவை தான். சங்குப்பூவை தொட்டு வீசும் காற்றை நாம் சுவாசித்தால் கூட சுவாசக் கோளாறு நீங்குமாம்.