கீரை வளர்ப்பு
இயல்பாகவே சிலருக்கு வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரித்து வருவார்கள். அவ்வகையில் நாம் வீணானது எனத் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையில் கீரைச் செடிகளை வளர்க்கலாம். இதனால், இயற்கையான முறையில் ஆரோக்கியமான கீரை கிடைப்பது மட்டுமின்றி, வீட்டிற்கு அழகுப் பொருளாகவும் இருக்கும்.
முதலில் தேங்காய் சிரட்டையை நன்றாக கழுவ வேண்டும். பிறகு, அதில் இருக்கும் தேங்காய் மஞ்சையை வெட்டி அதனுள் செம்மண் கலந்து சிரட்டைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர், தேங்காய் சிரட்டைக்குள் கீரை விதைகளைத் தூவி விட்டு தண்ணீரைத் தெளித்து விடுங்கள்.