Kshama Bindu
குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஆண்-பெண் என்ற திருமண பந்தத்தில் விருப்பமில்லாத ஷாமா பிந்து, தன்னை தானே திருமணம் செய்து வாழப் போவதாக அறிவித்தார். இதை ‘சோலோகமி’ என குறிப்பிடுகின்றனர். இந்த திருமணத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Kshama Bindu
ஜூன் 11ஆம் தேதி கோவிலில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த ஷாமா, முன் கூட்டியே தனக்கு தானே பாரம்பரிய முறையில் இன்று தாலி கொண்டார். இந்த திருமணத்தில், மெஹந்தி, இசைக்கச்சேரி, மேடை அலங்காரம், அழைப்பிதழ், மணப்பெண் உடை உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த திருமண விழாவில் நெருங்கிய தோழிகள், உடன் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
Kshama Bindu
இதன் மூலம், பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் நடைபெற்றுள்ளது. பொதுவாக, வெளிநாடுகளில், ஏன் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகளை இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டோம். ஆனால் அவை எங்கோ வெளிநாடுகளில் நடக்கின்றன. இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா என்று நினைத்திருக்கலாம். ஆனால், அது இந்தியாவிலும் அரங்கேற இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kshama Bindu
ஒரு புறம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மணப்பெண் கிடைக்காமல் 90ஸ் கிட்ஸ் திண்டாடும் நிலையில், இந்த நிகழ்வு வெறுப்பேற்றுவதாக பலரும் புலம்புகின்றனர்.