- மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே அடிக்கடி சூடான நீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.
- காபி டீ போன்ற பானங்களை தவிர்க்கலாம் அல்லது விதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- சூடாக சூப் குடிக்கலாம்.
- அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம். இது தவிர உப்பு, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்வது பாதுகாப்பானது.
- சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனை, இதய போன்ற பிரச்சனை உள்ள கர்ப்பிணிகள் மழைக்காலத்தில் மருத்துவர் ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- குறிப்பாக மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்து மாத்திரைகள் எடுக்கக் கூடாது.
- இவை தவிர நல்ல தூக்கம், மன அழுத்தமின்மை, ஆரோக்கியமான உணவு முறை ஆகியவையும் மிகவும் அவசியம்.