நீங்கள் விதிகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்?
கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளுக்கு என சில விதிமுறைகளை விதிக்கிறார்கள். அதை குழந்தைகள் எந்த கேள்விகளும் என்று பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகள் அதை எதிர்த்து கேள்வி கேட்கும் போது அவர்களை கண்டிக்கிறார்கள். விதிகளை மீறும் போது அவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. மென்மையான பெற்றோர் தேவையான விஷயங்களுக்கு ஏற்ப விதிகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் குழந்தைகளுடைய போக்கில் அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு வளர்க்கிறார்கள்.
தவறு செய்தால் என்ன செய்வீர்கள்?
உங்களுடைய குழந்தை தவறு செய்தால் அதை எப்படி கையாளுகிறீர்கள் என்பது நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர் என்பதை வெளிப்படுத்தும். கண்டிப்பான பெற்றோர் குழந்தைகள் செய்த தவறு எப்படிப்பட்டது அதன் விளைவுகள் என்ன என்பதை குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள். ஆனால் மென்மையான பெற்றோர் அந்த தவறு ஏன் நிகழ்ந்தது என்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை குறித்தும் அதை எப்படி கடந்து வருவது என குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது குறித்தும் சிந்திக்கிறார்கள்.