Natural Remedies For Chili Pepper Burn : பொதுவாக நாம் பச்சை மிளகாய் வெட்டியப் பிறகு கைகளில் ஒருவிதமான எரிச்சல் ஏற்படும் சிலருக்கு இந்த எரிச்சல் மிகவும் கடுமையாக இருக்க படும். சில சமயங்களில் காரமான உணவுகளை சாப்பிட்டால் கூட உங்கள் கைகள் எரிவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அது ஏன்? அதற்கான காரணம் என்ன மற்றும் பச்சை மிளகாய் வெற்றியை பிறகு கையெழுத்தில் நீங்க என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
பெப்பர் பர்ன்ஸ்?
பெப்பர் பர்ன்ஸ் என்பது நீங்கள் உங்களது கையில் எரியும் உணர்வு ஆகும். மிளகாய் பயன்படுத்திய பிறகு உங்களது கை எரிவதற்கு முக்கிய காரணம் மிளகாயில் உள்ள கேப்சைசின் என்று வேதிப்பொருள்தான். சமைப்பதற்கு மிளகாய் வெட்டும் போது அதிலிருந்து கேப்சைசின் வெளியேறுகிறது. இது கைகளில் பட்டவுடன் எரியும் உணர்வு ஏற்படும். கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகள் ரொம்பவே சென்சிட்டிவ் ஆனதால், பச்சை மிளகாய் வெட்டிய கைகளில் இந்த சென்சிடிவ் ஆன பகுதிகளில் வைத்தால் எரிச்சல் அடையலாம். நிபுணர்களின் கூற்றுப்படி மிளகாய் தொட்ட கையை ஒருபோதும் கண்ணில் வைக்க கூடாது அது ஆபத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர். சரி, இப்போது பச்சை மிளகாய் வெட்டிய பிறகு கை எரிவதில் இருந்து நிவாரணம் பெற சில எளிய வலிகள் இங்கே உள்ளன.
மிளகாய் வெட்டிய பிறகு எரிச்சலை போக்க எளிய வழிகள் :
பால் அல்லது தயிர் : மிளகாய் வெட்டிய பிறகு கைகளில் எரிச்சல் நீக்க பால் அல்லது தயிரை கைகளில் தடவி சில நிமிடங்கள் கழிந்து கழுவி விடுங்கள். ஏனெனில் பால் மற்றும் தயிரில் இருக்கும் புரோட்டீன் கேப்சைசின் தீவிரத்தை குறைக்க உதவும்.
எண்ணெய் : மிளகாயில் இருக்கும் கேப்சைசின் எண்ணெய்யில் எளிதாக கரைந்துவிடும். எனவே, உங்களது ஆவில் அல்லது வெஜிடபிள் ஆயிலை கைகளில் தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு கழுவலாம்.
ஆல்கஹால் : ஆல்கஹால் எண்ணெய்யை விட மிளகாயில் இருக்கும் கேப்சைசின் மிக எளிதாக கரைத்துவிடும். எனவே உங்களிடம் ஆல்கஹால் இருந்தால் கைகளில் ஆல்கஹாலை தேய்க்கலாம் அல்லது கழுவலாம். இதனால் எரிச்சல் குறையும்.
பேக்கிங் சோடா : மிளகாயால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்க பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து பாட் பேஸ்ட் தயாரித்து, அதை உங்களது கைகளில் தடவி காய்ந்த பிறகு, சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
வினிகர் ; வினிகரில் இருக்கும் அமிலத்தன்மை கேப்சைச்சின் தீவிரத்தை குறைக்க உதவும். எனவே, இதை கைகளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
55
மிளகாய் வெட்டும் போது கைகள் எரிவதைத் தவிர்க்க :
மிளகாய் வெட்டும் போது கையுறை பயன்படுத்துங்கள். மேலும், மிளகாய் வெட்டிய பிறகு கைகளை கழுவாமல் ஒருபோதும் கண் பகுதியில் வைக்க வேண்டாம். மேலே சொன்ன குறிப்புகள் பின்பற்றியும் கைகளில் கொப்புழங்கள், வலி வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.