இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மரபணு, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயை முழுமையாக ஒழித்து விட எந்த வழிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம் மற்ற பாதிப்புகளையும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோய் என சொல்லப்படும் நீரிழிவு நோய் உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மரபணு உள்ளிட்ட காரணங்களால் நம் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இதனை கட்டுப்படுத்த முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் அடுத்தடுத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 5 வகையான காலை உணவுகள் தான்..! லிஸ்ட் இதோ..!!.