இதன் மூலம் குழந்தைகள் சவால்கள் மற்றும் தோல்விகளை கற்றலுக்கான வாய்ப்புகளாகப் பார்க்கிறார்கள். குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் நாளை பிரமிப்புடனும், உற்சாகத்துடன் கழிக்கின்றனர்.
அன்றைய நாளில் உங்கள் குழந்தைகள் பார்த்த அல்லது செய்த சிறந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர்கள் கேட்கலாம். இந்த கேள்வி அந்த தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் மதிப்புமிக்கவர்களாகவும் புரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள். உற்சாகமான அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியின் உணர்வுகளை அதிகரிக்கலாம், சமூக பிணைப்புகளை வலுப்படுத்தலாம்.
குறிப்பாக பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே. சிரிப்பு என்பது குழந்தைகளின் நாளின் இன்றியமையாத பகுதியாகும், இது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மகிழ்ச்சிக்கும் பங்களிக்கிறது.
இன்ற எதற்காக நீ சிரித்தாய் என்று உங்கள் குழந்தையிடம் கேட்கலாம். இது நாளின் மகிழ்ச்சியான தருணங்களை முன்னிலைப்படுத்த உதவுகிறது. உங்கள் குழந்தையின் சமூக தொடர்புகள் பற்றிய தகவல்களையும் உங்களுக்கு வழங்கலாம். நம் குழந்தையை யார் அல்லது எது சிரிக்க வைத்தது என்பதைப் புரிந்துகொள்வது அவர்களின் நட்பு மற்றும் நகைச்சுவை உணர்வை தெரிந்து கொள்ள பெற்றோருக்கு உதவும்.