இயற்கையாக கிடைக்கும் இனிப்பு vs செயற்கை சர்க்கரைக்கு வித்தியாசம்?
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றில் இயற்கையாக இனிப்பு கிடைக்கும். அதாவது இது போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளில் சர்க்கரை நம் உடலுக்கு இயற்கையாகவே கிடைக்கும். புரதம், மற்ற ஊட்டச்சத்துக்களுடன் மேலே சொன்ன உணவு வகைகளை சாப்பிடுவது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உதவும். இந்த உணவுகளை நம் உடல் மெதுவாக செரிப்பதால், அதில் உள்ள இயற்கை சர்க்கரைகள் செல்களுக்கு படிப்படியாக கிடைத்து நிலையான ஆற்றல் கிடைக்கும்.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்பது நீரிழிவு, இதய பிரச்சினைகள், பல் ஆரோக்கியம் போன்றவை ஏற்படுவதன் அபாயத்தைக் குறைக்கும். செயற்கை சர்க்கரை உள்ள உணவுகளை உண்பது காலப்போக்கில் பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதை அறியாமல் பெரும்பாலானோர் அதிக சர்க்கரையை சாப்பிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, பழ ஜூஸ், செயற்கை பானங்கள், பிஸ்கெட்டுகள், கேக்குகள், இனிப்பு கலந்த பால் பொருள்கள், ஐஸ்கீரிம்கள் போன்றவை செயற்கை சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ளன. இது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.