பாக்டீரியா வெப்பத்தை எதிர்க்கும் நச்சுகளை உருவாக்க முடியும், அதாவது சாதத்தை மீண்டும் சூடாக்குவது நோய் அபாயத்தை நீக்கிவிடாது. இதனால் உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் ஒன்று முதல் ஐந்து மணி நேரத்திற்குள் ஏற்படலாம். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
சமைத்த சாதத்தை எப்படி சேமிப்பது?
சமைத்த சாதத்தை முறையாக சேமித்து வைப்பது, பாக்டீரியா மாசுபாட்டால் சாதம் கெட்டுப்போவதையும், உணவு மூலம் பரவும் நோய்களையும் தடுக்க மிகவும் அவசியம். மீதமுள்ள அரிசியை எவ்வாறு பாதுகாப்பாக சேமிப்பது என்பது இங்கே:
உடனே ஆறவைக்கவும்
சமைத்த பிறகு, சூடான சூழலில் வளரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க அரிசியை விரைவாக குளிர்விப்பது முக்கியம். சமைத்த அரிசியை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பரப்பி வைத்து ஆறவிடவும்.
தினமும் பருப்பு சாதம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?