Published : Oct 17, 2024, 08:49 AM ISTUpdated : Oct 17, 2024, 01:48 PM IST
Can we eat leftover rice : மீதமான சாதத்தை சாப்பிடுவது சில நேரங்களில் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். சரியான முறையில் சேமித்து மீண்டும் சூடுபடுத்தினால், மீதமான சாதத்தைப் பாதுகாப்பாக உண்ணலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தினமும் சாதம் மீதமாகும் போது அதை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சமைத்து சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டுள்ளனர்.. ஆனால் மீதமான சாதத்தை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இது உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் இரவு உணவிற்குப் பயன்படுத்தும் எஞ்சிய சாதத்தை உட்கொள்வது பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த நீங்கள் சில விஷயங்களைச் செய்யலாம்.
மீதமான சாதத்தை சாப்பிடுவது பாதுகாப்பானதா?
சாதத்தில் பொதுவாகக் காணப்படும் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா காரணமாக, எஞ்சியிருக்கும் அரிசியை உண்பது எப்போதும் பாதுகாப்பானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமைத்த பிறகு, சாதத்தை அறை வெப்பநிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்தால், பாக்டீரியா வேகமாகப் பெருக்கத் தொடங்குகிறது.
25
Leftover Rice
பாக்டீரியா வெப்பத்தை எதிர்க்கும் நச்சுகளை உருவாக்க முடியும், அதாவது சாதத்தை மீண்டும் சூடாக்குவது நோய் அபாயத்தை நீக்கிவிடாது. இதனால் உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் ஒன்று முதல் ஐந்து மணி நேரத்திற்குள் ஏற்படலாம். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
சமைத்த சாதத்தை எப்படி சேமிப்பது?
சமைத்த சாதத்தை முறையாக சேமித்து வைப்பது, பாக்டீரியா மாசுபாட்டால் சாதம் கெட்டுப்போவதையும், உணவு மூலம் பரவும் நோய்களையும் தடுக்க மிகவும் அவசியம். மீதமுள்ள அரிசியை எவ்வாறு பாதுகாப்பாக சேமிப்பது என்பது இங்கே:
உடனே ஆறவைக்கவும்
சமைத்த பிறகு, சூடான சூழலில் வளரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க அரிசியை விரைவாக குளிர்விப்பது முக்கியம். சமைத்த அரிசியை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பரப்பி வைத்து ஆறவிடவும்.
சாதம் நன்றாக ஆறிய உடன் அதனை காற்று புகாத கொள்கலன்கள் அல்லது மறுசீரமைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் மாற்றவும். சாதம் ஆறிய உடன், சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும், இதனால் பாக்டீரியா வளர்ச்சியின் ஆபத்து குறைக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
45
How To Reheat Leftover Rice
சமைத்த சாதத்தை பாதுகாப்பாக மீண்டும் சூடுபடுத்துவது எப்படி?
சமைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்துவது உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்க மிகவும் முக்கியமானது.
1. மைக்ரோவேவ் பயன்படுத்தவும்
சாதத்தை மீண்டும் சூடுபடுத்த மைக்ரோவேவ் அவனை பயன்படுத்தவும். சாதம் காய்ந்து போகாமல் இருக்க, அதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து அதில் கிளறவும். பின்னர் மூடி போட்டு, சுமார் ஒரு நிமிடம் சாதத்தை மைக்ரோவேவ் செய்து, பின்னர் கிளறி வெப்பநிலையை சரிபார்க்கவும். சாதம் முழுவதும் சூடாக இருக்கும் வரை 30 வினாடிகளில் மைக்ரோவேவ் செய்வதைத் தொடரவும். சாதம் உண்பதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்ய, 165 டிகிரி பாரன்ஹீட் உள் வெப்பநிலையை அடைவதை உறுதிசெய்யவும்.
சாதத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மூடி போட்டு அதை அடுப்பில் வைக்கவும். குறைவான வெப்பத்த்தில் சாதத்தை சூடுபடுத்தி, ஒட்டாமல் இருக்க அவ்வப்போது கிளறவும். சாதம் 165 டிகிரி பாரன்ஹீட் உள் வெப்பநிலையை அடையும் வரை சூடாக்கவும். அரிசியை ஒரு முறைக்கு மேல் மீண்டும் சூடாக்க வேண்டாம். மீண்டும் சூடுபடுத்துவது பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.