நீரிழிவு நோய் 40ஐ கடந்த வீட்டில் எவரேனும் ஒருவருக்கு வரும், உலகளாவிய நோயாக மாற துவங்கியுள்ளது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவையும் பானத்தையும் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சிறுநீரக நோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம்.
அப்படியாக சர்க்கரை நோயாளிகள் என்னென்னெ உணவுகள் சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்ற வரைமுறை உள்ளது.
பொதுவாக அரிசி, உருளைக்கிழங்கு போன்று அதிக மாவுசத்து நிறைந்த பொருட்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும், அவ்வாறு அதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் என்றும் நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது.
அதாவது, சாதத்தை அவ்வாறு குளிரூட்டும்போது அது எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாறிவிடுகிறது. இதனை சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.இது கொஞ்சம் ஆச்சர்யமானதாக இருக்கும் ஆனாலும் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.