பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவு பரிமாறப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், இமயமலையின் ஸ்பெஷல் குச்சி காளான் கவனம் ஈர்த்துள்ளது. இது உலகின் விலை உயர்ந்த காளான்களில் ஒன்று. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பரிமாறப்பட்ட இமயமலை குச்சி காளான், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. சைவ உணவு குறித்த ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு மத்தியில் இது பிரபலமானது.
25
குச்சி காளானின் சிறப்பம்சங்கள்
குச்சி காளானில் நார்ச்சத்து, புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதை செயற்கையாகப் பயிரிட முடியாது; காடுகளில் இயற்கையாக மட்டுமே வளரும். மலை காடுகளில் இருந்து இதைப் பறிப்பது மிகவும் கடினமான வேலை.
35
குச்சி காளான் விலை
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இயற்கையான இந்த காளானின் விலை கிலோவுக்கு ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை விற்கப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இது கிடைக்கிறது. இது மிகவும் அரிதான காளான் வகையாகும்.
உள்ளூர் மக்களும் விவசாயிகளும் காடுகளில் இருந்து இந்தக் காளான்களை சேகரித்து, அவற்றை உலர வைக்கின்றனர். சந்தையில் விற்கப்படும் குச்சி காளான்கள் பெரும்பாலும் உலர வைக்கப்பட்டவையே. இதன் தனித்துவமான நறுமணம் மற்றும் வடிவத்திற்காக இது விரும்பப்படுகிறது.
55
பிரிக்ஸ் மாநாட்டில் குச்சி
பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் குச்சி காளான் ஒரு முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. இதன் சுவை, மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களையும் அதிகாரிகளையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்திய குச்சி காளான் உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.