குழந்தையுடன் தூங்குவதைத் தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கவனமாகக் கருத்தில் கொள்வதும் பின்பற்றுவதும் முக்கியம். குழந்தைகள் எப்போது பெற்றோருடன் தூங்குவதை நிறுத்த வேண்டும் என்பதற்கு என்ற கட்டாய விதி எதுவும் இல்லை. குழந்தை மிகவும் உங்களுடன் இணைந்திருந்தால், அவரை வேறு அறையில் படுக்க சொல்வது நல்ல யோசனையல்ல. இதைப் பற்றி முடிவெடுக்க உங்கள் பிள்ளைக்கு அவகாசம் கொடுங்கள்.
தாங்கள் ஒரு தனி நபர் என்றும், அம்மா அப்பாவை உள்ளடக்கிய சிறிய வட்டத்தில் தாங்கள் இல்லை என்றும் அவர்கள் ஒருபோதும் உணரக்கூடாது. அவர்கள் இறுதியில் வளர்ந்து விஷயங்களைப் புரிந்துகொள்வார்கள், அதுவரை பெற்றோர்கள் இந்த அருகாமையையும் கவனத்தையும் மதிக்க வேண்டும்.
ஆனால் பெற்றோருடன் தூங்குவதால் ஆறுதல் மற்றும் பாதுகாப்பிற்காக பெற்றோரின் இருப்பை நம்பியிருப்பது குழந்தைகளுக்கு சுதந்திரமான தூக்க பழக்கம் இருக்காது. ஒருகட்டத்திற்கு மேல் குழந்தைகள் தனியாக தூங்க பழகிக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஏன் தனியாக தூங்கப் பழக வேண்டும் தெரியுமா?:
குழந்தைப் பருவத்தில், பெற்றோர்கள் அதிகம் பற்றுதலுடன் இருப்பார்கள். இந்த காரணத்திற்காக, குழந்தைகளுடன் தூங்குவது தவறல்ல. ஆனால் குழந்தைகள் வளர வளர, அவர்கள் தனியாக தூங்கப் பழகுகிறார்கள். சில நேரங்களில் குழந்தை தனியாக தூங்க விரும்புகிறது, ஆனால் பெற்றோர்கள் அதை அனுமதிக்கவில்லை. இது முற்றிலும் தவறானது. இதைத் தொடர்ந்து செய்து வந்தால், குழந்தை எப்பொழுதும் தூங்குவதற்கு பெற்றோரைத் தேடும்.